"மூதுரை" என்னும் நூளில் "ஔவையார்" எழுதிய பாடல் இது...
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளய்
நட்டாலும் நண்பல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
சூழ்நிலையின் தாக்கம் இருந்தாலும் சில பொருட்களின் தன்மை மாறுவதில்லை... நன்கு கொதிக்க வைத்த பாலின் சுவை மாறாமல் இருப்பது போல... நண்பர்கள் அல்லாத இருவர் அருகருகே இருந்தாலும் அவர்கள் நண்பர்களாக மாறுவதில்லை...
தீயினால் சுடப்பட்டாலும் உட்புறம் வெண்மை நிறம் மாறாமல் இருக்கும் சங்கினை போல, எத்துனை துன்பம் வந்தாலும் மேன்மக்கள் பெருந்தன்மை உடையவர்களாகவே திகழுவர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக