செவ்வாய், 8 மே, 2012


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...

விளக்கம்:
ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்... அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்... எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர்...

7 கருத்துகள்:

  1. அருமையான பாடல் அற்புதமானதும் மனித வாழ்வில் பொருள்ளீட்டி தமக்காகவோ அல்லது பிறரிக்காவோ மற்றும் தற்காலத்துக்கோ அல்லது பிற்காலத்துக்கோ
    உதவும்படிவாழ்வது சாலச்சிறந்தது

    பதிலளிநீக்கு
  2. இரண்டாமடியில் தவறான சீரமைப்பு. மான மழிந்து மதிகெட்டு - போனதிசை என்றிருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நான் ஆரம்பப் பள்ளியில் படித்த பொழுது இதை படித்திருக்கிறேன் மிகவும் அருமையான கருத்துள்ள பாடல்

    பதிலளிநீக்கு
  4. எந்தக்காலத்திலும் யாவரும் படித்து மனப்பாடமாக வைத்துக்கொள்ள வேண்டிய பாடல்

    பதிலளிநீக்கு
  5. ஔவை யின் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.
    இது முக்கியமாக இளைய தலைமுறையினர் படித்து உணர வேண்டியது.
    மற்றவரைப் பார்த்து தகுதி மீறி சென்று வருத்தப்படக்கூடாது என்று உணரவைக்கும் பாடல்.

    பதிலளிநீக்கு