செவ்வாய், 22 மே, 2012



ஓடும் நீளம் தனை ஒரே எட்டு
கூறு தாக்கி கூரிலே ஒன்றை
தள்ளி குன்றத்தில் பாதியை சேர்த்தால்
வருவது கர்ணம் தானே

போதாயனர் என்னும் புலவர் எழுதிய பாடல் இது...

விளக்கம்:

அடிப்பகுதியினை (நீளம்) எட்டு சமமான பகுதிகளாக (கூறு) பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து அதனுடன் குன்றின் அரை பகுதியினை கூட்டினால் கர்ணத்தின் அளவு கிடைக்கும்.

மேற்கூறியது வேறு ஒன்றமல்ல... நாம் கணிதத்தில் படித்த பிதகோரசு தேற்றம்தான் (Pythagoras theorem).

அடிப்பகுதி (Base) - 8
குன்று (Height) - 6

அடிப்பகுதியினை எட்டு சமமான பகுதிகளாக பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து --> 8-(8/8) = 8 - 1 = 7

குன்றின் அரை பகுதி --> 6/2 = 3

அவை இரண்டையும் கூட்டினால் --> 7 + 3 = 10

பிதகோரசு தேற்றத்தின் படி (Pythagoras theorem):
கர்ணம் = அடிப்பகுதியின் வர்க்கம் + குன்றின் வர்க்கம் ஆகியவற்றின் வர்க்கமூலம்...

கர்ணத்தின் வர்க்கம் = (8 * 8) + (6 * 6) = 64 + 36 = 100
கர்ணத்தின் வர்க்கமூலம் = 10

பிதகோரசு தேற்றம் இயற்றப்படுவதர்க்கு முன்பாகவே அந்த கணித கூற்றினை நமது முன்னோர்கள் கூறிவிட்டனர்... நாம் அவற்றை உலகறிய எடுத்து செல்லாததால் நமது கண்டுபிடிப்பு உலகிற்கு தெரியவில்லை...

3 கருத்துகள்:

  1. தவறு! காண்க: http://vaadaikkaatru.blogspot.com/2012/03/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  2. தவறினை சுட்டி காட்டியமைக்கு நன்றி... முழுவதும் தவறில்லை என்பது மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  3. http://vaadaikkaatru.blogspot.com/2012/03/blog-post_28.html

    இதில் தவரொன்றும் நான் காணவில்லை., சில கணக்குகளில் 0.5 அல்லது அதற்கு மேல் வந்தால் நாம் முழு எண்ணாக கொள்வோம் அல்லவா? அதே போல 0.5 க்கு கீழே வந்தால் நாம் அந்த 0.5 க்கு குறைவான குறையென்னை விடுத்து முழு எண்ணை எடுத்துகொள்வோம் அல்லவா, அதுபோல கணக்கில் கொண்டால் போதாயனர் என்னும் புலவர் எழுதிய பாடல் சரியானதே

    பதிலளிநீக்கு