வெள்ளி, 6 ஏப்ரல், 2012


பாடல் 1:
அத்தமும் வாழ்வு மகத்துமட்டே விழி யம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு
கைத்தல மேல் வைத்தழு மைந்தருஞ்சுடு காடுமட்டே
பற்றி த் தொடரு மிருவினைப் புண்ணியம் பாவமுமே...

மேற்கூறிய பாடலை படித்தவுடன் எத்துனை பேருக்கு அதன் அர்த்தம் புரியம் என்று சொல்லயியலாது... அதன் அர்த்தம் புரியாதவர்கள் பின்வரும் பாடலை படித்தால் அதன் அர்த்தம் கண்டிப்பாக புரிந்துவிடும்...

பாடல் 2:
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

மேற்கூறிய இரண்டு பாடல்களும் ஒரே பொருளை உணர்த்துகின்றன...
முதல் பாடல் பட்டினத்தார் அவர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது...

இரண்டாவது பாடல் கவியரசு கண்ணதாசன் அவர்களால் அரை  நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது...

ஒரே கருத்தினை காலத்திர்க்கேற்ப மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக இரண்டு கவிஞர்களும் எழுதியுள்ளது அவ்விரு பாடல்களின் தனிச்சிறப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக