புதன், 4 ஏப்ரல், 2012


பழமொழி: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

மூதுரை என்னும் நூலில் ஔவையார் அவர்கள் எழுதிய பாடல் பின்வருமாறு.

மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தளன்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும்.

பசி வந்தால் பறந்துபோகும் பத்து என பின்வருவனவற்றை ஔவையார் கூறுகிறார்.

மானம்
குலம்
கல்வி
வன்மை
அறிவுடைமை
தானம்
தவம்
உயர்ச்சி (பதவி)
தளன்மை (இளகிய மனம்)
காமுறுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக