திங்கள், 2 ஏப்ரல், 2012


பழமொழி: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க...!!!

பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்த பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தும் ஒரு பழமொழி...

பதினாறு குழந்தைகள் பெற்று நன்றாக வாழவேண்டும் என்று விளையாட்டாக சிலர் பொருள் கொல்வதுமுண்டு...

வாழ்க்கையில் பெற வேண்டிய பதினாறு என்ன என்பதை ஒரு பாடலில் கூறியுள்ளனர்...

துதிவாணி வீறு விசயம் சான்தனம் துணிவு
தனம் மதி தானியம் சௌபாக்கியம் போகம் அறிவு
அழகு பெருமை ஆறாம் குலம் நோய்கள்பூண் வயது
பதினாறு பேரும் தருவாய் பராபரமே...

துதிவாணி
வீறு
விசயம்
சான்தனம் (குழந்தை பேறு)
துணிவு
தனம்
மதி
தானியம்
சௌபாக்கியம்
போகம்
அறிவு
அழகு
பெருமை
அறம்
குலம்
நோய்கள்பூண் வயது (நோயற்ற நெடு வாழ்வு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக