திங்கள், 30 ஏப்ரல், 2012


சொல் அமைப்பில் ஒரு சொல்லாக வந்தாலும் இரண்டு (அ) மூன்று பொருளுடன் விளங்கும் கவிதை சிலேடை எனப்படும்.

கவி காளமேகத்தின் சிலேடை பாடல்:

வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல் மேனித் திருமலைராயன் வரையில்
வைக்கோலும் மால்யானை ஆம்.

விளக்கம்:

வாரிக் கள‌த்தடிக்கும் – கதிர் அறுவடை செய்து பின்னர் களத்துமேட்டிற்கு வந்து நெற்களை பிரிப்பதற்கு அடிக்கப்படும் (வைக்கோல்) / எதிரிகளை தன் துதிக்கைகளாலே தூக்கி போர் களத்தில் அடித்து கொள்ளும் (யானை)

வந்தபின் கோட்டைபுகும் – வைக்கோலில் இருந்து நெல்லை பிரித்த பிறகு, அதனை சேகரித்து கோட்டைக்குள்ளே வைக்கப்படும் (வைக்கோல்) / எதிரிகளை கொன்று விட்டு வெற்றி வாகையோடு எதிரியின் கோட்டைக்குள் புகும் (யானை)

போரிற் சிறந்து பொலிவாகும் – பெரிய வைக்கோல் போர்களாக அடுக்கி வைத்து சிறப்புற்று அழகாய் விளங்கும் (வைக்கோல்) / யானையின் அங்கம் போரில் முக்கியம் என்பதால், போரில் சிறந்து விளங்கி சிறப்பாக திகழும் (யானை)

இவ்வாறு சிறப்புற்ற சிவந்த தேகம் கொண்ட திருமலைராயன் மலைச்சாரலில் வைக்கோலும் யானையும் நிறைய இருக்கிறது என்று திருமலைராயன் மலையின் தானிய மற்றும் போர் வளத்தை சிலேடையாக பாடினார் கவி காளமேகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக