ஞாயிறு, 22 ஏப்ரல், 2012


பாடல்:
சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வர்சிரியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே நல்ல
குலமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்

மேற்கூறிய பாடலை எழுதியவர் ஔவையார் அவர்கள்...

பொருள்:
பிறர் கேட்காமலேயே உதவுபவர்கள் உயர்ந்தவர்கள், வண்மையானவர்கள்... பிறர் கேட்ட பிறகு உதவுபவர்கள் சிறியவர், சாதாரணமானவர்கள்... பிறர் கேட்ட பின்பும் உதவாமல் இருப்பவர் கயவர்கள், பெருந்த்தன்மையற்றவர்கள்...

இவர்கள் பலா, மா மற்றும் பாதிரி மரங்களை போன்றவர்கள்... பலாமரம் தான் பழம் தரப்போவதை "பூ" பூத்து அறிவிக்காமல் காய் காய்க்கும்... மாமரம் தான் பழம் தரப்போவதை "பூ" பூத்து அறிவித்து காய் காய்க்கும்... பாதிரி மரம் "பூ" பூக்கும் ஆனால் காய் கைக்காது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக