சனி, 7 ஏப்ரல், 2012


பாடல்:
நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
புலபுலென கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே...

பொருள்:
நாக்கு பிளந்துபோகுமலவிர்க்கு பொய்களை பேசி செல்வந்தனை சேர்த்து, இது நல்லது இது கேட்டது என்று தெரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத பெண்ணை திருமணம் செய்துகொண்டு, மண்ணிலிருந்து வெளிவருகின்ற புற்றீசல்களை போல பல குழந்தைகளை பெருகின்றீர்...

அவர்களை நன்றாக வளர்க்கவும் முடியாமல், கைவிட்டுவிட்டு செல்லவும் முடியாமல், பாதி அறுத்த மரத்தில் கால்தனை நுழைத்த பிறகு, அதில் வைத்திருந்த ஆப்பதனை அசைத்ததினால் மரத்திர்க்கிடையில் மாட்டிக்கொண்டு வெளியேரமுடியாமல் தவிக்கும் குரங்கின போல தவிக்கின்றீரே...

இப்பாடல் பட்டினத்தார் அவர்களால் எழுதப்பட்டது...

1 கருத்து: