ஞாயிறு, 1 ஏப்ரல், 2012


ஔவையார் - இந்த பெயரை கேட்டவுடனேயே நம் கண்முன் தோன்றுவது பழம்பெரும் நடிகை கொ.பா.சுந்தராம்பாள் (K.B.Sundarambal) அவர்கள்தான்...

ஆனால், ஔவையார் அவர்கள் எழுதிய நூல்களின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், ஔவையார் என்ற பெயரில் மூன்று பெண் புலவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளதாக அறியப்படுகிறது...

முதல் ஔவையார் - இவர் சங்க காலத்தில் வாழ்ந்தவர். இவருக்குதான் தகடூர்-ஐ ஆண்ட அதியமான் நெடுமனஞ்சி தான் பெற்ற சாகாவரம் கொடுக்கும் நெல்லிக்கனியினை கொடுத்தார்.

அதற்க்காக, பின்வரும் பாடலை ஔவையார் அதியமான் நெடுமனஞ்சி பற்றி பாடினார். இந்த பாடல் புறநானூறில் இடம் பெற்றுள்ள பாடல்.

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

இரண்டாம் ஔவையார் - இவர் ஒன்பது-பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பின்வரும் நூல்கள் அவரால் எழுதப்பட்டவை.

ஆத்திச்சூடி
கொன்றைவேந்தன்
மூதுரை
நல்வழி

இவர் முதல் ஔவையார் இல்லை என்ற முடிவிற்கு வர காரணம்:
நல்வழி நூலில் நாற்பதாவது பாடலில், திருமூலர், தேவாரம், திருவாசகம் ஆகியவை மேற்க்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆகையினால் அவர் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும், யாப்பருங்கலம் என்னும் நூலில் கொன்றைவேந்தன் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது. ஆகையினால் அவை பன்னிரெண்டாம் நூற்றாண்டிர்க்குப்பின் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

மூன்றாவது ஔவையார் - இவர் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி போன்ற புலவர்கள் வாழ்ந்த பன்னிரெண்டாம்-பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பின்வரும் நூல்கள் அவரால் எழுதப்பட்டவை.

நானக் குறள்
விநாயகர் அகவல்
கல்வியோழுக்கம்
அருந்தமிழந்தாதி
அகத்துக்கொவை
நன்மணிமாலை

இவர் மூன்றாவது ஔவையார் என்ற முடிவிற்கு வர காரணம்: கம்பருக்கும் இவருக்கும் நடந்த புலமைப் போட்டி. "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற வரிகள் அந்த விவாதத்தின்போது அவர் கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக