ஞாயிறு, 11 மார்ச், 2012


எனது கிறுக்கல்கள்:

சில குழந்தைகள் மனதில்...

தன்னை மடியில் தவழ விடாமல் மடிக்கணினியை மடியில் போட்டு தாலாட்டிக்கொண்டிருக்கும் தாய்...

தன் முகத்தை பாராமல் முகப்புத்தகத்தை நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் தந்தை...

தன்னை கண்டு பரிதாபப்படாமல்... செல்லம்மா, துளசி - இவர்களின் நிலையை கண்டு தினமும் பரிதாபப்படும் பாட்டி...

தன்னுடன் நேரம் கழிக்காமல், செய்திகள் பார்ப்பதும் படிப்பதும், தன் நண்பர்களுடன் பூங்காவில் விவாதிப்பதுமாக காலம் கழிக்கும் தாத்தா...

முதியோர் இல்லத்திற்கு ஒரு முன்னோட்டம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக