எனது கிறுக்கல்கள்:
சில குழந்தைகள் மனதில்...
தன்னை மடியில் தவழ விடாமல் மடிக்கணினியை மடியில் போட்டு தாலாட்டிக்கொண்டிருக்கும் தாய்...
தன் முகத்தை பாராமல் முகப்புத்தகத்தை நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் தந்தை...
தன்னை கண்டு பரிதாபப்படாமல்... செல்லம்மா, துளசி - இவர்களின் நிலையை கண்டு தினமும் பரிதாபப்படும் பாட்டி...
தன்னுடன் நேரம் கழிக்காமல், செய்திகள் பார்ப்பதும் படிப்பதும், தன் நண்பர்களுடன் பூங்காவில் விவாதிப்பதுமாக காலம் கழிக்கும் தாத்தா...
முதியோர் இல்லத்திற்கு ஒரு முன்னோட்டம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக