செவ்வாய், 6 மார்ச், 2012

தமிழ் எழுத்துக்களின் பிறப்பிடம்...


இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட "நன்னூல்" எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது? பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது? துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி விரிவாக கூறப்பட்டிருக்கிறது...

தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது. இதை ஒலிக்க உதடு, நாக்கு, பல்,அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ), அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது. அங்காத்தல் ( வாய் திறத்தல் ), உறல் ( பொருந்துதல் ), வருடல் ( தடவுதல் ), ஒற்றுதல், குவிதல் என்று செயல்படுகின்றது என விவரிக்கிறது.

அ,ஆ எனும் முதல் இரு எழுத்தும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு - வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றது...

இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்தும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய்,அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் ( பொருந்துதல் ) செயலால் எழுத்தாகி ஒலிக்கிறது !.

உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்தும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக