செவ்வாய், 6 மார்ச், 2012

தமிழில் பேசுவோம்...


"அம்மா" என்னும் வார்த்தை அர்த்தம் சொல்லும் வார்த்தை!

அண்ணா பல்கலைகழகம் சார்பில் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில், தமிழக திட்டக்குழு உறுப்பினர் தமிழருவி மணியன், "தமிழுக்கு தலைவணக்கம்" எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

அப்போது அவர், 'நம் வீட்டில் கூட தற்பொழுது தமிழில் பேசுவதை மறந்துவிட்டோம். குழந்தைகள் பெற்றோர்களை 'மம்மி, டாடி' என்று தான் அழைக்கின்றனர். ஆனால், தமிழில் 'அம்மா' எனும் வார்த்தை எப்படி உருவானது என்று பலருக்கு தெரியாது.

அம்மா என்பதில், உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக 'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' மெய் எழுத்தையும், 10 மாதம் கழித்து உடல் உயிராக உலவவிடுவதால் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தையும் வைத்துள்ளனர்.

அதே போன்றுதான் 'அப்பா' எனும் சொல்லும் அமைந்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் 'அம்மா' எனும் சொல்லில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வன்மையனவர் என்பதால் 'ப்' எனும் வல்லின எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட மொழி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக